அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு  கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபோது எடுத்த படம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபோது எடுத்த படம்.
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடுவார்பட்டி கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு  கட்சி  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். 

மாவட்ட செயற்குழு  உறுப்பினர் உமாமகேஸ்வ ரன், ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில குழு உறுப்பினர் பொண்ணுத்தாய் சிறப்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக பரப்பளவு கொண்ட முடுவார்பட்டி ஊராட்சியில் வடக்கு பகுதியில் ரேசன் கடை அமைக்க வேண்டும்,  தினசரி பழ மார்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். 

அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் நியமனம், குடிநீர் வசதி, நிழற்குடை மற்றும் சுற்றுச்சுவர் வசதி செய்து தர வேண்டும். பழுதடைந்த பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பித்து தர வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் பிச்சை நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com