search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாய்கள் விரட்டியதில் காயமடைந்த மான் சாவு
    X

    பலியான மான்

    நாய்கள் விரட்டியதில் காயமடைந்த மான் சாவு

    • நாய்கள் விரட்டியதில் காயமடைந்த மான் இறந்தது.
    • அதனை வனப்பகுதியில் புதைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 13 ஆயிரம் எக்டேரில் வனப்பகுதி அமைந்துள்ளது.இங்கு யானை, கரடி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் உசிலம்பட்டியை அடுத்த மலைப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற 2வயது பெண் மானை நாய்கள் விரட்டிச் சென்று கடித்து உள்ளன.

    இதில் காயமடைந்த அந்த மான், புதூர் மலைப்பகுதியில் நடக்க முடியாமல் இருந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் இன்று காலை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் அன்பழகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த மானை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    அப்போது மான் வலிப்பு வந்து பரிதாப மாக இருந்தது. அதனை வனப்பகுதியில் புதைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×