search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும்
    X

    மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும்

    • மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும் என்று சப்புராம் கூறினார்.
    • கட்டண சலுகையை மூத்தகுடி மக்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணன் ஆகியோருக்கு, தென்னக ெரயில்வே மண்டல பயனீட்டாளர் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சுப்புராம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-

    மதுரையில் இருந்து ஐதராபாத் செல்ல நேரடி ரெயில் சேவை இல்லை. எனவே சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயில்களில் ஒரு ரெயிலை சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    மேலும் மதுரையில் இருந்து திருப்பதி செல்வ தற்கு தினசரி ெரயில் இயக்கப்பட வேண்டும். உயிரிழப்பு போன்ற அசாதா ரணமான சூழ்நிலையில் பயணிகளுக்கு உதவிடும் வகையில் காப்பீட்டு திட்டங் களை மிக எளிமையான முறையில் செயல்படுத்தி நுகர்வோர்களுக்கு இழப்பீடு விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் ெரயிலில் பயணம் செய்பவர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் ரயில் மற்றும் தண்டவாளங் களில் பராமரிப்பு பணி களை மேம்படுத்த வேண்டும்.

    பயணிகளின் எண்ணிக் கையை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து ராமேசுவரம், கன்னியா குமரி, கோவை, திருச்சி, நாகப்பட்டினம் போன்ற இடங்களுக்கு தினமும் இருவேளை ரெயில்களை இயக்க வேண்டும்.

    ராமேசுவரம் பாம்பன் கடலில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயில்வே தூக்கு பாலத்தை பாரம் பரிய சின்னமாக அறி விக்க வேண்டும்.

    மதுரை ரெயில் நிலை யத்தில் பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடல்நகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தி அங்கு ரெயில்கள் நின்று செல்லும் வகையில் ரெயில்வே நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மதுரை, ராமேசுவரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் கைவினை பொருட்களை விற்க ஏதுவாக இலவச ஸ்டால் களை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மதுரையில் இருந்து சென்னை வரை இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகத்தை அதிகரிப்பதுடன் அதன் பயண நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். ரெயிலில் மூத்த குடிமக்களுக்கு பெண்க ளுக்கு 50 வயதுக்கு மேல் 50 சதவீதம் சலுகை கட்ட ணம், ஆண்களுக்கு 60 வயதுக்கு மேல் 40 சதவீத சலுகை கட்டணம் நடை முறையில் இருந்து வந்தது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த கட்டண சலுகையை மூத்தகுடி மக்களுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    Next Story
    ×