சிலம்ப போட்டி

திருமங்கலத்தில் சிலம்ப போட்டி நடந்தது. சோட்டோகான் நிறுவனர் பால்பாண்டி முன்னிலை வகித்தார்.
சிலம்ப போட்டி
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் பள்ளியில் இந்தியன் லீ சாம்பியன் மார்சியல் ஆர்ட்ஸ் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து மாபெரும் சிலம்பம் போட்டி நடத்தின. போட்டியை மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் மணி தொடங்கி வைத்தார். சோட்டோகான் அமைப்பின் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

சோட்டோகான் நிறுவனர் பால்பாண்டி முன்னிலை வகித்தார். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராம்நாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வயது அடிப்படையிலும், மாணவர்களின் தகுதியின் அடிப்படையிலும் பல்வேறு கட்ட போட்டிகளாக நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பி.கே.என். பள்ளி நிர்வாக கமிட்டியினர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com