search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்.

    துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் பெண்கள் உள்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் திரண்டனர். மாநில தலைவர் விஜய குமார் தலைமையில் கோ ரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களை அரசு ஊழியராக அங்கீகரிக்க வேண்டும்.

    மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவ லர்களுக்கு அரசா ணைப்படி ஊதியம் கொடுக்க வேண்டும். கொரோனா காலங்களில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஒரே மாதிரியான பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். வார விடுமுறை, அரசு விடுமு றையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    Next Story
    ×