search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் 17 மையங்களில் குடிமைப்பணி தேர்வு
    X

    மதுரையில் 17 மையங்களில் குடிமைப்பணி தேர்வு

    • மதுரையில் 17 மையங்களில் குடிமைப்பணி தேர்வு நடந்தது.
    • 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மதுரை

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங் களில் இன்று நடந்தது. இதில் 6 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுரை மாவட்டத்தில் 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9.30 முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடந்தது.

    Next Story
    ×