search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன்-பணம் திருட்டு
    X

    செல்போன்-பணம் திருட்டு

    • செல்போன்-பணம் திருடியவர்கள் சிக்கினார்கள்.
    • அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மதுரை

    மதுரை மணி நகரம் மணி அய்யர் சந்தை சேர்ந்த கண்ணன் மகன் ராஜசேகர் (வயது33). இவர் தமிழ் சங்கம் ரோட்டில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒரு வாலிபர் திருட முயன்றார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீ சில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி கொண்டமநாயக்கன் பட்டி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் பிரசாந்த் (26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தங்கமணி மகன் காளி (20).இவர் மதுரை புதூர் 20 அடி ரோட்டில் நின்று கொண்டி ருந்தார். அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் காளியை கல்லால் தாக்கி செல்போனை பறித்து தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    செல்போன் பறித்த 17 வயது சிறுவனுடன் சம்பக்குளம் மச்சக்காளை மகன் சக்திவேல் (22), வைரவன் மகன் ஊர்க்காவலன் என்ற பாண்டி (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் தொடர்புடைய மலைச்சாமியை தேடி வருகின்றனர்.

    மதுரை கீழ வைத்திய நாதபுரம் 5-வது தெருவை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ் குமார் (29). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அவரிடம் இருந்த ரூ.500-ஐ ஒரு வாலிபர் திருடிக்கொண்டு தப்ப முயன்றார். தினேஷ்குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டிப்பிடித்து கரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பருத்தி கன்மாய் ரோட்டை சேர்ந்த சேதுபாண்டியன் மகன் முருகன்(36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    செல்லூர் முத்துராம லிங்கபுரம் முதல் தெரு 60 அடி ரோட்டை சேர்ந்த ராஜசேகர பாண்டியன் மகன் விஜய் சுதர்சன் (26). இவர் தல்லாகுளம் பிள்ளை யார் கோவில் தெருவில் செ ன்று கொண்டி ருந்தார்.

    அவரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி ரூ.3 ஆயி ரத்தையும், செல்போ னையும் பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின்பே ரில் தல்லா குளம் போ லீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் நிலையூர் கைத்தறிநகர் செந்தில் மகன் கார்த்திக் என்ற சுள்ளான் கார்த்திக் (26), நெல்லை மாவட்டம் நான்குநேரி தேன்ராஜ் மகன் அலெக்ஸ் பாண்டியன் (23), மீனாம்பாள்புரம் பள்ளிவாசல் தெரு சங்கர் மகன் பிரவீன் குமார் என்ற சிரிப்பு பிரவீன் (26), செல்லூர் மீனாட்சிபுரம் வ.உ.சி.தெரு முனியாண்டி மகன் பிரவீன் என்ற மிட்டாய் பிரவீன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×