வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கப்பட்டது. 2014-ம் ஆண்டில் கல்லூரியில் பட்டாம்பூச்சி பூங்கா நிறுவப்பட்டு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு
Published on

மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அமெரிக்கன் கல்லூரி நெரிசலான நகர்புறத்தில் காணப்பட்டாலும் பலவகை பட்டாம்பூச்சிகளுக்கு புகலிடமாக உள்ளது. இங்கு அரிய வகை செடி, கொடிகள் காணப்படுகின்றன. இங்கு வண்ணத்துபூச்சிகளுக்கு தேவையான தட்பவெப்ப சூழல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விலங்கியல் இளங்கலைத்துறைத்தலைவர் ஜாய் ஷர்மிளா தலைமையில் கல்லூரி வளாகத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் கணக்கெடுப்பு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் டேலியா ரூபா செய்திருந்தார். ஆராய்ச்சி மாணவி அர்ச்சனா சுற்றுசூழலில் வண்ணத்துப்பூச்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகள் போன்றவற்றை விளக்கி பேசினார்.

அமெரிக்கன் கல்லூரியின் வளாகத்தில் 26 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு அழகிகள், வெள்ளையன்கள், வரியன்கள், நீலன்கள் போன்ற பல வகையான பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. இதில் வரியன் வகை பட்டாம்பூச்சிகள் அதிக அளவில் காணப்பட்டன. கல்லூரியில் மஞ்சள் புலி, வரி புலி, நீலப்புலி, ராஜவண்ணத்தி, ரோஜா அழகி, கருவேப்பிலை அழகி, அரளி விரும்பி, எலுமிச்சை நீலன், கொள்ளை வெள்ளையன், சின்னபுல் நீலன், புங்க நீலன், எலுமிச்சை வசீகரன் போன்ற பட்டாம்பூச்சி வகைகள் பதிவு செய்ய பட்டன. இதில் மிகவும் மனதை கவரும் வண்ணத்துப்பூச்சி நீல சங்கழகன் ஆகும். இந்தியாவின் 2-ம் பெரிய வகை பட்டாம்பூச்சி கருநீலவண்ணன் ஆகும். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், அவர்களின் முயற்சியால் 2014-ம் ஆண்டில் கல்லூரியில் பட்டாம்பூச்சி பூங்கா நிறுவப்பட்டு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com