search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலமேட்டில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
    X

    பாலமேட்டில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

    • பாலமேட்டில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
    • மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கிராம மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அலங்காநல்லூர்

    பாலமேட்டில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றியம் சார்பில் மண்டல் செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்தஜெயம், மாவட்ட துணை தலைவர் கோவிந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர் கண்ணன், மண்டல் பார்வையாளர் சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொதுச் செயலாளர்கள் கண்ணன், முத்துக்குமார், சங்கர் கணேஷ், மண்டல் பொருளாளர் மாவீரன், ஆகியோரது ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடந்தது. இதில் தமிழக அரசின் வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 37 ஊராட்சிகளுக்கும் சென்றடைய வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கிராம மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்ட பொறுப்பாளர்கள், மண்டல் பொறுப்பாளர்கள், அணி மற்றும் பிரிவு தலைவர்கள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×