search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
    X

    ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

    • அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று வளர்த்து வருகின்றனர். இந்த காளையை அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பூசாரி லோகு (34) பராமரித்து வருகிறார். இந்த காளை 6வயதை எட்டியுள்ள நிலையில் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து சங்கத்தினர் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் பங்கேற்று பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறோம். இந்த காளைக்கு கரிகாலன் என பெயர் சூட்டி ஆண்டுதோறும் மே 1-ந்தேதி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். அதேபோல இந்த ஆண்டும் காளைக்கு பிறந்தநாள் விழா நடத்தினோம் என்றனர்.

    Next Story
    ×