என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாய் வளர்க்கும் தகராறில் கணவன் - மனைவி மீது தாக்குதல்
Byமாலை மலர்4 Jun 2023 8:07 AM GMT
- நாய் வளர்க்கும் தகராறில் கணவன் - மனைவி மீது தாக்குதல் நடந்தது.
- காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 55), விவசாயி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சத்தியமூர்த்தி (44). இவர் வளர்க்கும் நாய் தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவரது வீட்டுக்கு வருபவர்களைப் பார்த்து குரைத்து விரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் தினகரன் வீட்டின் அருகே நடந்துவந்த போது, அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் சத்தியமூர்த்தி தாக்கியுள்ளார். அதைப் பார்த்து தடுக்க வந்த தினகரன் மனைவி ஜெயசீலாவுக்கு அடி விழுந்தது. இதில் காயமடைந்த இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து தினகரன் கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X