என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்லும்
- அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மதுரை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை ரெயில்வே கோட்ட பகுதியில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691/20692) சாத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இதேபோல மதுரை - புனலூர் - மதுரை ரெயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். மேலும் திருச்சி - ராம நாதபுரம் - திருச்சி ரெயில்கள் (16849/16850) கீரனூர் ரெயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும். இந்த கூடுதல் நிறுத்தங்கள் வருகிற 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மண்டபம் - அஜ்மீர் - மண்டபம் ஹம்சபார் விரைவு ரெயில்கள் (20973/20974) புதுக்கோட்டை, ராமநாத புரம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். வருகிற 23-ந்தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
மேலும் மண்டபம் - அயோத்தியா - மண்டபம் ஷிரத்தா சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராமநாதபுரம், காரைக்குடி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். வருகிற 24-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்