search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்லும்
    X

    அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்லும்

    • அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    • 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மதுரை

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ரெயில்வே கோட்ட பகுதியில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரெயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691/20692) சாத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    இதேபோல மதுரை - புனலூர் - மதுரை ரெயில்கள் (16729/16730) சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். மேலும் திருச்சி - ராம நாதபுரம் - திருச்சி ரெயில்கள் (16849/16850) கீரனூர் ரெயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும். இந்த கூடுதல் நிறுத்தங்கள் வருகிற 20-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மண்டபம் - அஜ்மீர் - மண்டபம் ஹம்சபார் விரைவு ரெயில்கள் (20973/20974) புதுக்கோட்டை, ராமநாத புரம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். வருகிற 23-ந்தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

    மேலும் மண்டபம் - அயோத்தியா - மண்டபம் ஷிரத்தா சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராமநாதபுரம், காரைக்குடி ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். வருகிற 24-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×