போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

வாடிப்பட்டி, சோழவந்தானில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.ரத வீதிகள் வழியாக பேரணி நடந்தது.
சோழவந்தானில் நடந்த விழிப்புணர்வு பேரணி.
சோழவந்தானில் நடந்த விழிப்புணர்வு பேரணி.
Published on

சோழவந்தான்

சோழவந்தானில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாரியம்மன் கோவில், சன்னதி தெரு, பெரிய கடை வீதி, ரத வீதிகள் வழியாக பேரணி நடந்தது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சத்யபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் முத்து தலைமை காவலர்கள் மாரியப்பன், பெரியமாயன் உக்கிர பாண்டியன், விவே கானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன், அரசு பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சரவணன், தீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டியிலும் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் இன்ஸ் பெக்டர் நித்யபிரியா தலைமை தாங்கினார். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் ராஜா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாயாண்டி, சேர்வை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரெங்கன், மதுவிலக்கு பிரிவு ஏட்டு நாகூர்கனி, ஏட்டு நாகராஜன், விவசாய ஆசிரியர் சுரேஷ், உடற்கல்விஆசிரியர்கள் சுரேஷ், பாண்டி, ஸ்டாலின் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சொசைட்டிதெரு, தாதம்பட்டி மந்தை, பெருமாள் கோவில், ஜெமினி பூங்கா, போஸ்ட் ஆபிஸ், பஸ் நிலையம், லாலாபஜார் வழியாக பேரணி நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com