என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.எஸ்.ஐ. பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றவர்கள்.
பள்ளிகளில் ஆண்டு விழா
- பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது.
- உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயசாந்தி வரவேற்றார். தலைமையாசிரியை பூங்கொடி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி, பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சோழ வந்தானில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர்- ஆசிரியர் கழக கவுரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், துணை சேர்மன் லதாகண்ணன் ஆகியோர் பரிசுவழங்கினர்.தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார். வரவேற்றார். ஆசிரியை பிரேம்குமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கினர். உதவி ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.
ராயபுரம் ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியை பணி மாதா, சோழவந்தான் ஆர். சி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி ஆசிர், பிர பாகர், மணிமேகலை, ஜாஸ்மின் ஜெனிபா ஆகியோர் பேசினர். உதவி ஆசிரியைகள் பிரேமா, அன்ன புஷ்பம், வனிதா, சாந்தகுமாரி, கிறிஸ்டிஜெய ஸ்டார் நிர்வாக ஆசிரியை அனிதா, இல்லம் தேடி கல்வியாசிரியைகள் ராக்கு, ரேகா, சத்துணவு அமைப்பாளர் முருகேசுவரி, உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






