search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி ஆவணம் தயாரித்து வங்கியில் நகையை அபகரிக்க முயற்சி
    X

    போலி ஆவணம் தயாரித்து வங்கியில் நகையை அபகரிக்க முயற்சி

    • போலியான ஆவணம் தயாரித்து வங்கியில் நகையை அபகரிக்க முயற்சி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார்.

    திருமங்கலம்

    சென்னை பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் அதியப்பன். இவரது மனைவி கனகரத்தினம் (வயது65). இவர் பார்வையற்றவர். இவருடைய சகோதரி சந்திரபிரபா. அவரது கணவர் பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரும் இறந்து விட்டனர். அவர்களுக்கு வாரிசு இல்லாததால் கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய உறவினர்கள் போலியான ஆவணம் தயாரித்து நகையை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த கனகரத்தினம் திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கனகரத்தினம் உறவினரான பாலமுருகன், அவரது மகன்கள் பிரதீப், வினித். இவர்களின் நண்பர் வினோத் ஆகிய 4 பேர் மீது திருமங்கலம் டவுன் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×