search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.ம.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

    • அ.ம.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
    • நகர செயலாளரும், கவுன்சிலருமான ஆனந்த் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூர் பஸ் நிலையம் அருகே அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆணைக்கிணங்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேலூர் ஆர். சாமி நினைவாக அ.ம.மு.க. கட்சிகொடியேற்று விழா, நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.பேரவை செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான டேவிட் அண்ணாதுரை கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் கட்சி அலுவலகம் அருகே உள்ள நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். நகர செயலாளரும், கவுன்சிலருமான ஆனந்த் தலைமை தாங்கினார். மேலூர் ஆசையன் சாமி, மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சோமாசி, சந்திரசேகரன், ராமகிருஷ்ணன், சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி தலைவர் கமல், நகர் துணைச் செயலாளர் செல்வம், சுக்காம்பட்டி ராசு, பேரவை வாசுதேவன், முன்னாள் கவுன்சிலர்கள் அன்புக்கரசு, சோனை, பெரியதுரை, கொட்டாம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் புருசோத்தமன், துரை, பிச்சன்செட்டி, நத்தர் அலி, வக்கீல்கள் முத்தையா, சுரேந்திரன், மேகவர்ணன், சிட்டம்பட்டி முருகேசன், கீரனூர் பிச்சை ராஜன், மில்கேட் ராஜேந்திரன், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×