என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- விருது வருகிற ஜனவரி திருவள்ளுவர்தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவ ள்ளுவர் திருநாளில் 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது வருகிற ஜனவரி திருவள்ளுவர்தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில், 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு தகுதியான நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட அளவில் அண்ணல் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து, ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
எனவே, 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது தொட ர்பாக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள சான்று களுடன் வருகிற
23-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்