செல்லூர் மீனாம்பாள்புரத்திற்கு மாற்று வழியாக பேருந்தை இயக்க வேண்டும் -பொதுமக்கள் வலியுறுத்தல்

செல்லூர் மீனாம்பாள்புரத்திற்கு மாற்று வழியாக பேருந்தை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்து சேவை இல்லாததால் மிக–வும் சிரமப்பட்டு வரு–கின்றனர்.
செல்லூர் மீனாம்பாள்புரத்திற்கு மாற்று  வழியாக பேருந்தை இயக்க வேண்டும் -பொதுமக்கள் வலியுறுத்தல்
Published on

மதுரை

மதுரை மாவட்ட கலெக் டர், எம்.எல்.ஏ., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஆகியோருக்கு 25-வது வார்டு பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்டது செல்லூர் மீனாம்பாள்புரம். மதுரை பொன்மேனி பணிமனையில் இருந்து மீனாம் பாள்புரத்திற்கு (வழித்தட எஎண் 6 ஏ) அனுப்பானடியில் இருந்து பல வருடங்களாக அரசுப்பேருந்து வந்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பால் பேருந்து சேவை நிறுத்தப்பட் டது.

பல மாதங்களாக பேருந்து சேவை இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இருந்து கேந்திரிய வித்யா–லாயா பள்ளி, ஓ.சி.பி.எம். பள்ளி, நாய்ஸ் பள்ளி, டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி, அமெரிக்கன் கல்லுாரி, செயின்ட்மேரிஸ் பள்ளி, சௌராஸ்டிரா பள்ளி, கிறிஸ்டியன் மிஷன் மருத்துவனை, தியாகராஜர் கல்லூரி, ராஜாஜி மருத்துவமனை செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் அலுவ–லர்கள் கூலி தொழிலாளர் கள் மற்றும் கடைகள் ஜவுளி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பேருந்து சேவை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசுப்பேருந்தை பி.டி.ராஜன் ரோடு, பீ.பி.குளம் வழியாக மீனாம்பாள்பு–ரத்திற்கு மாற்று வழியில் இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com