search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை தியேட்டர்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் ஆரவாரம்
    X

    மதுரை செல்லூரில் துணிவு படம் வெளியான தியேட்டரில் குவிந்த அஜித் ரசிகர்கள்.

    மதுரை தியேட்டர்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் ஆரவாரம்

    • மதுரை தியேட்டர்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
    • மேளதாளம் முழங்க கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது.



    காளவாசலில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் கோஷமிட்டபடி மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர்.

    மதுரை

    தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு, நடிகர் விஜய் நடித்த வாரிசு ஆகிய 2 திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரை யரங்குகளில் இன்று அதி காலை ரிலீஸ் செய்யப்பட்டது.

    மதுரையில் 19 தியேட்டர் களில் துணிவு திரைப் படமும்,14 தியேட்டர்களில் வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் துணிவு சிறப்பு காட்சிகள் தொடங்கின.முதல் காட்சியை காண தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் கூட்டம் களை கட்டியது.பட்டாசு வெடித்து கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து மேளதாளம் முழங்க ரசகர்கள் ஊர்வலமாக வந்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணியளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் அதிகாலையில் விஜய் ரசிகர்களும் திரளாக பங்கேற்று தியேட்டர்களில் குவிந்தனர்.பின்னர் பட்டாசு களை வெடித்து மேள தாளம் முழங்க ரசிகர்களை வரவேற்று அவர்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன.

    ரசிகர்களின் இந்த வெற்றி கொண்டாட்டத்தால் மதுரை தியேட்டர்களில் ரசிகர் களின் ஆரவாரங்களால் விசில் சத்தம் பறந்தது. ஒரே தியேட்டர்களில் அஜித்- விஜய் படங்கள் திரையிடப்பட்டுள்ளதால் ரசிகர்களின் மோதலை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகை வரை இந்த 2 திரைப்படங் களுக்கும் சிறப்பு காட்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது .துணிவு, வாரிசு திரைப்படங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஆயிரம் ரூபாயை தாண்டி டிக்கெட்டுகள் ரசிகர் களுக்கும் பொது மக்களுக்கும் கொடுக்கப்படு வதாக தெரிய வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட தியேட்டர்களை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    இதுதவிர ரசிகர் மன்ற காட்சிகள் என்ற பெயரில் ரசிகர் மன்றங்கள் அதிக அளவில் டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாகவும் புகார் இருந்து உள்ளது.இதனால் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை பொதுமக்கள் பொங்கலுக்கு வழக்கமான கட்டணத்தில் திரையில் பார்ப்பதில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் திரையிடப்பட்டன. அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து இன்று துணிவும், வாரிசும் திரைக்கு வந்து உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சி யுடனும், ஆரவாரத்துடனும் கொண்டாட தொடங்கி உள்ளனர்.

    Next Story
    ×