பாறை உருண்டு விழுந்து பட்டதாரி வாலிபர் பலி

பாறை உருண்டு விழுந்து பட்டதாரி வாலிபர் பலியானார்.பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாறை உருண்டு விழுந்து பட்டதாரி வாலிபர் பலி
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் பேரையூர் பழையூரை சேர்ந்தவர் முத்தையா. அவரது மனைவி பூங்கொடி(வயது42). இவர்களின் மூத்த மகன் நிறைகுளத்தான்(27). முத்தையா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பட்டதாரி வாலிபரான நிறைகுளத்தான் ஆடு மேய்த்து வந்தார்.

அவர் ேநற்று தென்மலை பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு தாவி குதித்துள்ளார். அப்போது ஒரு பாறை உடைந்து உருண்டு நிறைகுளத்தான் நெஞ்சின் மேல் விழுந்தது.

இதில் படுகாயமடைந்த அவரை அதே பகுதியை சேர்ந்த பாண்டி, அய்யப்பன் ஆகிய 2 பேர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி நிறைகுள த்தானின் தாய் பூங்கொடி, பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com