search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை பறித்த பெண்கள் உட்பட 3 பேர் கைது
    X

    நகை பறித்த பெண்கள் உட்பட 3 பேர் கைது

    • பைக்கில் சென்று நகை பறித்த பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    மதுரை

    திருமங்கலம், உசிலம்பட்டி, வத்தலகுண்டு சுற்று வட்டாரப் பகுதி களில் கடந்த ஒரு மாதத்தில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. பைக்குகளில் வந்தவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

    திருமங்கலம், நரி யம்பட்டி, உத்தப்ப நாயக்கனூர் பகுதிகளில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். விக்கிரமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும், வத்தலகுண்டு அண்ணாநகரை சேர்ந்த சரோஜா (41), அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா (22), நிலக்கோட்டை அருகே உள்ள தும்மலபட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தர்மா (24) என்பதும் தெரியவந்தது.

    மேற்கண்ட 3 பேைரயும் விக்கிரமங்கலம் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×