பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால இலவச திறன் பயிற்சி

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால இலவச திறன் பயிற்சி
Published on

மதுரை

மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) க.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:-

மதுரை தமிழ்நாடு கட்டு–மான கழகமானது தொழிலா–ளர் உதவி ஆணையர் அலு–வலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலா–ளர்களுக்கு மூன்று மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம் பாட்டு பயிற்சிகள் வழங்கப் பட உள்ளது.

3 மாத கால திறன் பயிற் சிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரி–யத்தில் உறுப்பினராக பதிவு செய்திருத்தல் வேண் டும். கல்வித்தகுதி 5-ம் வகுப்ப முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

இந்த பயிற்சி 3 மாதம் நடைபெற உள்ளது. முதல் மாதம் தையூரில் அமைய–வுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2 மாத காலம் நீவலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெற உள்ளது. கொத்தனார், பற்ற வைப்பர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர–வேலை, கம்பி வளைப்பவர், தச்சுவேலை ஆகிய தொழில் புரிபவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.

பயிற்சி கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் இலவச–மாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் அனைவருக் கும் எல் அண்டு டி கட்டு–மான திறன் பயிற்சி நிலை–யம் தனியார் நிறுவனத்தால் 100 சதவீத வேலை–வாய்ப்பு வழங்கப்படும்.

ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழி–லாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து மூன்று ஆண்டு உறுப்பி–னராக இருத்தல் வேண்டும். 18 வயதிற்கு மேல் இருப்ப–தோடு, தொழிலாளர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும். இந்த பயிற்சி தையூரில் அமைய–வுள்ள கட்டுமான கழகத்தில் 7 நாட்கள் நடைபெறும்.

கொத்தனார், பற்ற வைப் பர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர வேலை, கம்பி வளைப்பவர், தச்சு–வேலை பயிற்சிகள் வழங்கப் படும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலையிழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங் கப்படும். இந்த தொகையில் உணவிற்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.

தமிழ்நாடு கட்டுமான கழகம் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத் தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இந்த 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 15.8.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய வளாகம், தொழிலாளர் உதவி ஆணை–யர் அலுவலகத்தை அணுகு–மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com