search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    110 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க அனுமதி
    X

    110 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க அனுமதி

    • திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    • இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து 61 கி.மீ. தூர ரெயில் பாதை அமைந்துள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 7 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இந்த 7 ரெயில்கள் பல்வேறு பகுதிக்கு செல்கின்றன. தற்போது இந்த பகுதியில் ரெயில்கள் 70 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடந்தன. ரெயில் வேக சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதையடுத்து திருநெல்வேலி-திருச்செந்தூர் ரெயில்வே பிரிவில் ரெயில்களை 110 கி.மீ. வேகத்தில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பகுதியில் ரெயில்கள் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

    மேலும் செங்கோட்டை-கொல்லம், திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி, மதுரை-விருதுநகர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நேரடி ரெயில் பாதையில் இருந்து அருகில் உள்ள ரெயில் பாதையில் பயணிக்கும் போது இதுவரை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. இதுவும் தற்போது இந்தப் பகுதிகளில் 30 கி.மீ. வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயில்களை வேகமாக இயக்குவதால் பயணிகளின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×