போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் போராட்டம்.
போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் போராட்டம்.
Published on

மதுரை

மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 200&க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து கழகங் களின் வரவுக்கும் செலவுக் கும் ஆன வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும், 2003-ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு, ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது-. 

இதில் சி.ஐ.டி.யூ. மண்டல தலைவர் அழகர்சாமி, உதவி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் தெய்வராஜ், கனகசுந்தர், மாரியப்பன், மணிமாறன், செல்வராஜ், மகாதேவன், முரளிதரன், பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com