மதுரையில் வாலிபர் எரித்துக்கொலை

மதுரையில் வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோரே அவரை கொன்று எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கொலை
கொலை
Published on

மதுரை

மதுரை ஆரப்பாளையம்  வைகை ஆற்று பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.   திலகர் திடல் போலீஸ் உதவி கமிஷனர் பழனிகுமார்,  கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர்   சம்பவ இடத்திற்கு  சென்று பார்த்தனர். 

அங்கு இறந்து கிடந்த வாலிபர் உடலில் கை, கால் தவிர மற்ற பாகங்கள்   எரிந்த நிலையில் கிடந்தன. முகம் முழுவதும் கருகிய நிலையில் இருந்தது. அந்த வாலிபருக்கு 25 வயது இருக்கும். ஆனால் அவர் யார்? என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது  ஆற்றுக்குள் சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். கரிமேடு போலீசார் எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையோர  சாலை யில் ரத்தச் சிதறல்கள் உள்ளன. ஆற்றுக்குள் சடலம் இழுத்து கொண்டு செல்லப் பட்ட நிலையில் தடயங்கள் காணப்படுகின்றன.  இதனால் அந்த வாலிபரை மர்ம கும்பல் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி எடுத்து வந்து வைகை ஆற்றுக்குள் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாம் என்று தெரிகிறது.

போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள   கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி அதில் உள்ள காட்சி பதிவு களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மதுரை மாநகரில் காணாமல் போனோரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் பிணமாக கிடந்தவர் மதுரை ஆரப்பாளையம் மறவன்தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மணிமாறன்  (வயது 45) என தெரியவந்தது.

கூலித்தொழிலாளியான இவர் நேற்று இரவு மது குடித்து விட்டு வந்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது  முருகேசன் மகனை கம்பால்   தாக்கியதாக தெரிகிறது. இதில் சுருண்டு விழுந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போலீ சுக்கு தகவல் தெரிவிக்காமல்  சைக்கிளில் உடலை ஏற்றிக் கொண்டு வைகை ஆற்றுக்குள் சென்று பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com