search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது  மோதி லாரி டிரைவர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மீது மோதி லாரி டிரைவர் பலி

    • மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவதாக மனைவி யிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 57) லாரி டிரைவர். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு பிரியா என்ற ஒரு மகளும் ஜீவா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மணி நேற்று முன்தினம் இரவு வீட்டி லிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவதாக மனைவி யிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    அவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங் கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சாயக்காடு பிரிவு ரோடு அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு பின்னால் அதிவேக மாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிள் உடன் மணி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து வேலக வுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மணியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கி டங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து போலீசார் மணியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடை யாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×