

தஞ்சாவூர்:
தஞ்சை சரகம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உறுப்பினர் கல்வி திட்டம் மற்றும் 7 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.44 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை கலந்துகொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்களை வழங்கினார். இதில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் பன்னீர்செல்வம், பூதலூர் கூட்டுறவு சார்பதிவாளர்-கள அலுவலர் சந்தியாஸ்ரீ, சங்கத்தின் செயலாட்சியர் நிஜந்தன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் ஓம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.