மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

5 மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான கடனுதவிகளை வழங்கினார்.நபார்டு வங்கியில் திட்ட பணிகள் குறித்து விரிவாக பேசினார்.
மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது.
மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது.
Published on

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் அமைந்துள்ள கருப்பூர் கவ்டசி தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நபார்டு வங்கியின் திட்டப்பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தஞ்சை நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் அனீஸ் குமார் தலைமை தாங்கி 5மகளிர் குழுக்களுக்கு ரூ 10 லட்சத்திற்கான கடன் உதவிகளை வழங்கி நபார்டு வங்கியில் திட்டப் பணிகள் குறித்து விரிவாக பேசினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் தஞ்சை மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஜெகதீசன், உதவி பேராசிரியர் ஜெயகாந்தன், நடுக்காவேரி யூனியன் வங்கி மேலாளர் ஜெகன், திருப்பூந்துருத்தி கால்நடை மருத்துவர் பிரீத்தி, மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நபார்டு வங்கியோடு இணைந்துகவ்டசி தொண்டு நிறுவன பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கணேஷ் வரி, ஆர்த்தி, ராஜா, ரூபன் செய்திருந்தனர்.

தொடக்கத்தில் கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடி யான் வரவேற்றார்.

வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com