search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடியில் மது விற்றவர் கைது
    X

    வாழப்பாடியில் மது விற்றவர் கைது

    • வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ராஜிவ் நகர் பகுதியில் மது விற்றவர் போலீசார் கைது செய்தனர்.
    • இவரிடமிருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ராஜிவ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 35). இவர், டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனால், இப்பகுதியில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, நேற்று குடியிருப்பு பகுதியில் வைத்து மது விற்பனை செய்த சுரேந்தரை, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்த 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×