search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் 1.40 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் புதுவையிலிருந்து கடத்தல்
    X

    திண்டிவனத்தில் 1.40 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் புதுவையிலிருந்து கடத்தல்

    • முருங்கப்பாக்கம் தனியார் பள்ளி அருகில் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை மடக்கி சோதனை செய்தனர்.
    • திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்.

    புதுச்சேரியில் இருந்து நேற்று திண்டிவனத்திற்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் இணையத்பாஷா தலைமையில் பே45ாலீசார், திண்டிவனம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது, ரோஷணை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முருங்கப்பாக்கம் தனியார் பள்ளி அருகில் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் 48 மதுபாட்டில்களை கொண்ட 20 அட்டைப்பெட்டிகளில், மொத்தம் 1,960 மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து, திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    மதுபாட்டில்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரமாகும். அதன் பேரில் கார் ஓட்டி வந்த முருங்கப்பாக்கம் சிவசக்தி நகரை சேர்ந்த கெஜராஜ்(வயது34) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், இவர் மீது ரோஷணை, கிளியனூர், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவில், ஏற்கனவே மதுகடத்தல் வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×