search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு  கூட்டம்
    X

    தியாகதுருகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    தியாகதுருகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த பேரணி யில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கலையமுதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய பொருளாளர் சின்னதுரை, நகர செயலாளர் சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்றத் தொகுதி செயலாளர் மதியழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் கலந்து கொண்டு வருகிற ஏப்ரல் 14- ந் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயகம் காப்போம் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன், மாநில தொண்டரணி செயலாளர் கூத்தக்குடி பாலு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பொன்னிவளவன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் மக்கா கலீல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆதிகர்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×