search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் உணவு கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்
    X

    கோவையில் உணவு கலப்படம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க புதிய செயலி அறிமுகம்

    • சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், மொத்த கொள்முதல் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மறுபொட்டலமிடுபவர், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும், உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில், தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு 'ஏதுவாக www.foodsaftey.tn.gov.in என்ற புதிய இணையதளத்தையும், tn food safety consumer app என்ற செயலியையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதிகளுடனும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஸ்கீரீன் ரீடர் அணுகள் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்டராய்டு ஐஓஎஸ்ஸில் பதிவிறக்கம் செய்யலாம்.

    மேலும், இந்த இணையத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தொடர்பு எண்கள், சேவைகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த இணைய இணைப்புகள் குறிப்பாக பதிவு மற்றும் உரிமம் விண்ணப்பித்தல், உணவு கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புத்தகங்கள், புகார் வசதிகள் போன்ற அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்கள்பொது மக்கள் இதற்கான இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம்.

    மேலும், புகார்தாரரின் விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியதா வது:-

    "நுகர்வோர் குறை தீர்ப்பு செயலி, ஆர்யுசிஒ, உணவு செரிவூட்டல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு குறும்படங்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், யூடியூப் போன்ற சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×