search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே நில மோசடி: தம்பிக்கு பங்கு வழங்காத அண்ணன் மீது வழக்கு
    X

    திண்டிவனம் அருகே நில மோசடி: தம்பிக்கு பங்கு வழங்காத அண்ணன் மீது வழக்கு

    • இதுகுறித்து நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    சென்னை பெரம்பூர், சுப்பிரமணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 65), ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர்களின் குடும்ப சொத்தான 6.67 ஏக்கர் நிலம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பேராவூர் பகுதியில் உள்ளது. இந்த சொத்தில் பொன்னுசாமிக்கு, இவரது அண்ணன் பேராவூரை சேர்ந்த சுப்ரமணி (72) பங்கு வழங்கவில்லை. இதுகுறித்து நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொன்னுச்சாமிக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் உரிய பங்கை வழங்காமல் சுப்பிரமணி ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பொன்னுசாமி புகார் அளித்தார். எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பெரில் விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணி தம்பிக்கு வழங்க வேண்டிய பாகத்தை முறைகேடாக அவரது மகன் சத்யாவிற்கு எழுதி கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி அவரது மனைவி அன்னக்கிளி, மகன் திவாகரன், மகள்கள் சரண்யா லட்சுமி பிரபா, சத்யா ஆகிய ஆறு பேர் மீது நில மோசடி பிரி வில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×