search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லட்சுமி நாராயணபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

     கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    லட்சுமி நாராயணபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    • பூர்ணாஹீதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது,

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மாலாபுரம் அக்ரகாரத்தில்

    ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, ஸ்ரீ பகவத் ப்ராத்தனா அனுக்ஞை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை கும்ப பூஜை, கலாகர்ஷனம்,கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் அங்குரார்பனம், திக்பந்தனம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    காலை 4ம் கால யாக சாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹீதி அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்ற பின்பு, மங்கல வாத்தியங்கள் முழங்கள், கடங்கள் புறப்பாடு நடைபெற்று அதன் பிறகு பட்டாச்சாரிகள் வேத மந்திரம் முழங்க விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்ற மகா கும்பாபி ஷேகம் சிறப்பாக நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவம், சிறப்பு அலங்காரம் மற்றும் வாண வேடிக்கைகள் நாதஸ்வர கச்சேரியுடன் கருட சேவை புறப்பாடு திருவீதி உலாவும் நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோபுராஜபுரம், மாலாபுரம், பெருமாங்குடி பஞ்சாயத்து தலைவர்கள், ஊர் நாட்டான்மை காரர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×