என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுராந்தகம் அருகே ஏரி உடைந்து வீணாகும் தண்ணீர்: விவசாயிகள் வேதனை
    X

    மதுராந்தகம் அருகே புதுப்பட்டி தாங்கல் ஏரி உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறும் காட்சி.

    மதுராந்தகம் அருகே ஏரி உடைந்து வீணாகும் தண்ணீர்: விவசாயிகள் வேதனை

    • தாங்கல் ஏரியை நம்பி 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளது
    • நள்ளிரவு ஏரியின் மதகு அருகே கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளது

    நள்ளிரவு ஏரியின் மதகு அருகே கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஒரு வார காலத்திற்கு பிறகு மழை ஓய்ந்து இருந்த நிலையில் இந்த ஏரி உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×