என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ேகாவையில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் மிதித்த தொழிலாளி - கரு கலைந்ததால் சோகம்
- மணிகண்டன் குடிேபாதையில் காவியாஞ்சலி வயிற்றில் மிதித்தார்.
- போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காவியாஞ்சலி (21). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிஸ்வந் (3) என்ற மகன் உள்ளார்.
இந்தநிலையில் காவியாஞ்சலி 3 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதன் காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மனைவி கர்ப்பிணி என்று கூட பாராமல் அவரது வயிற்றில் மிதித்தார். இதில் வலி தாங்க முடியாமல் காவியாஞ்சலி சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்டு செட்டிப்பாளையம் அவ்வை நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்த காவியாஞ்சலிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது காவியாஞ்சலிக்கு கரு கலைந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தனது கரு கலைந்ததற்கு காரணமான தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்