search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் கெடிலம் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
    X

    கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி இறந்தவரின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு கொண்டு வந்த போது எடுத்த படம்.

    கடலூரில் கெடிலம் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

    • இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர்.
    • தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இன்று காலை ஒருவர் ஆற்றின் கரையோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென அந்த நபர் மாயமானர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர். ஆனால் அவர் நீரிலிருந்து வெளியில் வரவில்லை.

    இதனை தொடர்ந்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த நபர் தண்ணீரில் மூழ்கி இறந்தது கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவர் கடலூர் நவநீதம் நகரை சேர்ந்த தொழிலாளி பன்னீர்செல்வம் (வயது 40) என்பது தெரிய வந்தது. ஆற்றில் மூழ்கி பலியான பன்னீர்செல்வம் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×