search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி
    X

    கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி

    • இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.
    • இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே கிருஷ்ணா புதூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது45) கூலி தொழிலாளி. இவரது உறவினர்கள் வெள்ளியங்கிரி(42), பழனிச்சாமி(43).சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் நேற்று மாலை கோத்தகிரியை அடுத்த கட்டபெட்டு பகுதியில் வேலை விஷயமாக சென்று விட்டு மீண்டும் கிருஷ்ணா புதூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.

    இருசக்கர வாகனத்தை நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஒரசோலை பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் 3 பேரும் வந்த போது எதிரே வந்த லாரி எதிர் பாரத விதமாக அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் வாகனத்தை ஓட்டி வந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். நாகராஜுடன் வாகனத்தில் பயணம் செய்த வெள்ளியங்கிரி மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர்களை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருவது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×