search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே இறந்த தாயின் நகைகளை திருடிய தொழிலாளி கைது
    X

    அன்னூர் அருகே இறந்த தாயின் நகைகளை திருடிய தொழிலாளி கைது

    • மருதாச்சலம் தனது தாயை ஆம்புலன்சில் ஏற்றி அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
    • இறந்த தாயின் தங்க நகைகளை திருடி, திருப்பி கேட்ட தந்தையை தாக்கி மிரட்டல் விடுத்த மருதாச்சலத்தை கைது செய்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இவர்களது மகன் கூலித் தொழிலாளி மருதாச்சலம் (48) என்பவர் வலுக்கட்டாயமாக தனது தாயை ஆம்புலன்சில் ஏற்றி அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மருதாச்சலம் தனது தாயின் உடலை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். அப்போது அவர் தனது தாய் அணிந்து இருந்த 2 பவுன் நககைளை கழற்றி வைத்துக்கொண்டார்.

    உடலை அடக்கம் செய்த பின்னர் ராமசாமி தனது மகனிடம் நகைகளை கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருதாச்சலம் தனது தந்தையை தாக்கினார். பின்னர் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து ராமசாமி அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த தாயின் தங்க நகைகளை திருடி, திருப்பி கேட்ட தந்தையை தாக்கி மிரட்டல் விடுத்த மருதாச்சலத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×