search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
    X

    கோவையில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

    • ராஜஸ்ரீ தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது 50).கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜஸ்ரீ (40). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ரவிசந்திரன் அடிக்கடி தனது மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ராஜஸ்ரீ கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று ராஜஸ்ரீ சிங்காநல்லூர் உழவர் சந்தை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ரவிசந்திரன் திடீரென தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ரவிசந்திரன் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து நடுரோட்டில் ராஜஸ்ரீயை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாறியாக தாக்கி னார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயம் அடைந்த ராஜஸ்ரீயை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து ராஜஸ்ரீ சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரவிசந்திரனை கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×