search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேம்பரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை நடைபெற்றது.

    வேம்பரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • கோவில் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சிறு வேம்பு பராசக்தி என்கிற வேம்பரிசி அம்மன் கோயில் உள்ளது.

    இக்கோவில் புனரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசி திருப்பணிகள் நிறைவடைந்தது.

    இதனை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம்பூர் வாங்க பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது விழா அன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பூர்ணாஹூதி மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாளங்களுடன் கோயில் விமான கலசத்தை வந்து அடைந்தது கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இதில் கோயில் நிர்வாகி சாந்தகுமாரி, நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் திரளான பக்தர்கள் தெருவாசிகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீசார் செய்தனர்.

    Next Story
    ×