வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
.
.
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள மாமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது32). விபத்தில் படுகாயம் அடைந்த இவர் அக்காள் வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து வேலு மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது பற்றி  நாகரசம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத் தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com