ஓசூரில் நள்ளிரவில் பயங்கரம் கார் டிரைவர் குத்திக்கொலை போலீஸ் விசாரணை

ஓசூரில் கார் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
.
.
Published on

ஓசூர்:

ஓசூர் அருகே அந்திவாடியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் உதயகுமார் (வயது32). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவு அந்திவாடியில் ஒதுக்குப்புறமான பகுதியில், சிலருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

அப்போது ஏற்பட்ட தகராறில், உதயகுமாரை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில், உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்வி ரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், உதயகுமார் மீது, மத்திகிரி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும், இவர் ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடி கஜா என்பவரின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com