சிங்காரப்பேட்டை அருகே தொழிலாளியை தாக்கிய வன ஊழியர் கைது

சிங்காரப்பேட்டை அருகே தொழிலாளியை தாக்கிய வன ஊழியர் கைது செய்தனர்.
.
.
Published on

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் தர்மன் (வயது51). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). வன ஊழியர். உறவினர்கள். இந்த நிலையில் ரமேஷ் தர்மனின் மோட்டார்சைக்கிளை 2 நாட்களுக்கு முன்பு வாங்கி சென்றார். ஆனால் திரும்ப கொடுக்கவில்லை. இது குறித்து தர்மன் கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், தர்மனை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் காயம் அடைந்த தர்மன் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வன ஊழியர் ரமேசை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com