காரில் புகையிலை கடத்தியவர் கைது

கிரிஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை காரில் கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
.
.
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கிருஷ்ணகிரி-தருமபுரி சேலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

விசாரணையில் திருப்பூர் மாவட்டம், கொடங்கி பாளையம் அடுத்துள்ள கரனம்பேட்டை பகுதியை சேர்ந்த முத்துகுமார் (வயது47) என்பவர் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே அவரை கைது செய்து 473 கிலோ புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com