சாலையை கடக்க முயன்ற பெண் லாரி மோதி பலி

குருபரப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற பெண் லாரி மோதி பலியானார்.
.
.
Published on

குருபரப்பள்ளி:

ஓசூர் பாகலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சுவேதா (வயது 20). இவர் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சீர் வரிசைகள் எடுப்பதற்காக கிருஷ்ணகிரிக்கு உறவினர்களுடன் சுவேதா மினி லாரியில் சென்றார். பின்னர் சீர்வரிசைகளை ஏற்றிக் கெர்டு மீண்டும் அனைவரும் ஓசூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குருபரப்பள்ளி மேம்பால பகுதியில் வந்த போது பின்னால் வந்த கார் லாரியின் மீது உரசியது. இதனால் மேம்பாலத்தில் லாரியும், காரும நிறுத்தப்பட்டது. அந்த நேரம் லாரியில் வந்தவர்களும், காரில் வந்தவர்களும் இறங்கி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது மினி லாரியில் இருந்த சுவேதா உள்பட அனைவரும் கீழே இறங்கினார்கள். அந்த நேரம் சாலையை கடக்க முயன்ற சுவேதா மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுவேதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com