டிப்பர் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல் 2 வாலிபர்கள் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
விபத்தில் பலியான சிவசங்கர், முனியப்பா.
விபத்தில் பலியான சிவசங்கர், முனியப்பா.
Published on

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே  மேலூரை சேர்ந்தவர்கள் சிவசங்கர் (வயது 23), முனியப்பா (22).  நண்பர்களான இருவரும் கட்டுமான பணிக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் உகாதி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வந்தனர். பின்னர் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக சிவசங்கர் , முனியப்பா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இருதுகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவசங்கர், முனியப்பா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியான சம்பவம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com