ரூ.2.5 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2.5 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆனது.
.
.
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. 

இதில் கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் கொப்பரை தேங்காய் 2.5 டன் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கேரளா, சேலம், வெள்ளக் கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கொள்முதல்  செய்ய வந்திருந்தனர். 

கிலோ 85 ரூபாய் முதல் 97 வரை ஏலம் போனது. இதில் வேளாண் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுந்தரம், பொது மேலாளர் முருகன், மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com