தென்பெண்ணை ஆற்றில் பெண் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தென்பென்ணை ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது.
.
.
Published on

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் பக்கமுள்ளது பாத்தகோட்டா. இங்கு தென்பெண்ணை ஆற்றில் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில்  காணப்பட்டது. 

இது குறித்து காமன்தொட்டி கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com