வேன் மீது பைக் மோதி கட்டிட தொழிலாளி பலி

ஒசூர் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.
.
.
Published on

ஓசூர்:

பெங்களூரு நௌமங்களா ரூரல் கோட்டை தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் ஓசூர்&ஆவலப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது முன்னால் சென்ற வேன் திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. இதில் நிலைதடுமாறி சந்தோஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேன் பின்புறம் மோதி யது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com